பந்திப்பூர்: பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் தனியார் நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கிய காட்டுயானையை மீட்டு 10 மணிநேரம் போராடி வனத்துறையினர் சிகிச்சை அளித்து காப்பாற்றினர். தமிழ்நாட்டின் முதுமலை புலிகள் காப்பகத்தை அடுத்து அமைந்துள்ள கர்நாடகாவின் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் ஓம்கர் வன சரகத்திற்கு உட்பட்ட பார்கி வன பகுதியில் இருந்து வெளியே வந்த காட்டு யானை ஒன்று அருகில் உள்ள தனியார் தோட்டத்திற்குள் புகுந்த போது மின்வேலியில் சிக்கியது. அப்போது மின்சாரம் தாக்கியதில் மயங்கி அந்த யானை கீழே விழந்தது.