சென்னை: ஏடிபி சேலஞ்சர் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் விளையாட தமிழக வீரர்கள் ஜீவன் நெடுஞ்செழியன், ராம் பாலாஜி இணை தகுதிப் பெற்றுள்ளது. சென்னையில் நடைபெறும் இந்தப் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவு காலிறுதி ஆட்டங்கள் நேற்று நடந்தன. முதல் காலிறுதி ஆட்டத்தில் இந்தியா சார்பில் தமிழகத்தைச் சேர்ந்த ராம் பாலாஜி, ஜீவன் நெடுஞ்செழியன் இணை , இந்தியாவின் மற்றொரு இணையான சுமித் நாகல், முகுந்த் சசிகுமார் ஆகியோருடன் மோதியது.
அதில் முதல் செட்டை தமிழக வீரர்கள் இணை 7-6(7-5) என்ற புள்ளிக் கணக்கில் போராடி வசப்படுத்தியது. ஆனால் அடுத்த செட்டில் மிக வேகமாக புள்ளிகளை குவித்து 6-0 என்ற புள்ளிக் கணக்கில் எளிதாக கைப்பற்றினர்.= அதனால் ஒரு மணி 12நிமிடங்கள் மட்டுமே நடந்த ஆட்டத்தை தமிழக வீரர்கள் இணை 2-0 என்ற நேர் செட்களில் வென்று முதல் இணையாக அரையிறுதிக்கு தகுதிப் பெற்றது.
ஒற்றையர் பிரிவில் விளையாடிய இந்திய வீரர்கள் எல்லோரும் முதல் சுற்றுடன் வெளியேறினர். ஆனால் சுமித் நாகல்(25வயது, 506வது ரேங்க்) மட்டும் 2வது சுற்றுக்கு முன்னேறினார். தொடர்ந்து நேற்று நடந்த காலிறுதிக்கு முந்தைய 2வது சுற்றில் தைவான் வீரர் ஜேசன் ஜூங்(33வதுயது, 343வது ரேங்க்) உடன் மோதினார். முதல் செட்டை அனுபவ வீரர் ஜேசன் 6-3 என்ற கணக்கில் வசப்படுத்தினார். ஆனால் அடுத்த 2 செட்களையும் 6-2, 6-0 என்ற புள்ளிக் கணக்கில் சுமித் எளிதில் கைப்பற்றினார். சுமார் 2 மணி நேரம் நீடித்த ஆட்டத்தை சுமித் 2-1 என்ற செட்களில் வென்றதுடன், காலிறுதிக்கு முன்னேறினார்.