சுல்தான்பூர்: உத்தரபிரதேசத்தின் சுல்தான்பூர் சந்திப்பு அருகே ஒரே பாதையில் வந்த 2 சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதியதில் 8 பெட்டிகள் தடம் புரண்டது. இதனால் லக்னோ-வாரணாசி வழித்தடத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. உத்தரபிரதேச மாநிலம் சுல்தான்பூர் சந்திப்பின் தெற்கு கேபிள் அருகே இன்று அதிகாலையில் 2 சரக்கு ரயில்கள் எதிர்பாராத விதமாக ஒரே பாதையில் வந்தது. இதனால் ஒன்றுடன் ஒன்று மோதியது. இதில் 2 இன்ஜின்களும் சேதமடைந்தன. 8 பெட்டிகள் தடம் புரண்டது.