கனடா ராமர் கோயிலை சேதப்படுத்திய கும்பல்: இந்தியாவுக்கு எதிராக வாசகத்தை சுவற்றில் எழுதினர்

டொரண்டோ: கனடாவில் உள்ள ராமர் கோயிலை காலிஸ்தான் ஆதரவாளர்கள் சேதப்படுத்தி அதில் இந்தியாவுக்கு எதிரான வாசகங்களை எழுதி வைத்து உள்ளனர். சீக்கியர்கள் அதிகமுள்ள கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் அதிக அளவில் உள்ளனர். இந்நிலையில், கனடாவின் மிசிசுகா நகரில் உள்ள இந்து மத வழிபாட்டுதலமான ராமர் கோயிலை காலிஸ்தான் ஆதரவாளர்கள் அவமதிப்பு செய்துள்ளனர். மத வழிபாட்டு தலத்திற்கு வெளியே உள்ள சுவற்றில் இந்தியா, பிரதமர் மோடிக்கு எதிராக வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன. இந்த சம்பவம் பிப்.13ல் நடந்து உள்ளது. இதுபற்றி டொரண்டோவில் உள்ள இந்திய தூதரகம் சார்பில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கனடாவில் இந்து கோயில் மீது தாக்குதல் நடத்தப்படுவது இது முதல் முறையல்ல. ஜனவரி மாதம் புராம்டனில் உள்ள கோயில் தாக்கப்பட்டது. அதற்கு முன்பு கடந்த ஆண்டு செப்டம்பரில் பிஏபிஎஸ் சுவாமிநாராயண் கோயில் தாக்கப்பட்டது.

Related Stories: