வாஷிங்டன்: இந்தியாவுடனான உறவை மேலும் வலுப்படுத்த அமெரிக்கா விரும்புவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடம் இருந்து, 190 போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்கள், 20 போயிங் 737 ரக விமானங்கள், 10 போயிங் 777எக்ஸ் ரக விமானங்களை இந்தியாவின் ஏர் இந்தியா நிறுவனம் வாங்கவுள்ளது. இதன் 220 விமானங்களின் மதிப்பு 34 பில்லியன் டாலர்களாகும். மேலும், கூடுதலாக 50 737 மேக்ஸ் ரக விமானங்கள், கூடுதலாக 20 737 ரக விமானங்களும் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு 45.9 பில்லியன் டாலர்களாகும். இதற்கான ஒப்பந்தம் நேற்றுமுன்தினம் கையெழுத்தானது.