அமெரிக்கா: அமெரிக்காவின் மிக்சிகன் பல்கலைக் கழகத்தில் இளைஞர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மூன்று மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மிக்சிகன் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நேற்று இரவு புகுந்த கறுப்பின இளைஞர் ஒருவர் பெர்கி அரங்கம் அருகே மாணவர் சிலரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் பலர் காயமடைந்து விழுந்தனர். பின்னர் மிக்சிகன் பல்கலைக்கழக யூனியன் கட்டடம் அருகே சென்ற இளைஞர் மீண்டும் கண்ணில்பட்டவர்களை எல்லாம் கைத்துப்பாக்கியால் சுட்டார்.