அமெரிக்காவின் மிக்சிகன் பல்கலைக்கழகத்தில் இளைஞர் துப்பாக்கிச்சுடு

அமெரிக்கா: அமெரிக்காவின் மிக்சிகன் பல்கலைக் கழகத்தில் இளைஞர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மூன்று மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மிக்சிகன் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நேற்று இரவு புகுந்த கறுப்பின இளைஞர் ஒருவர் பெர்கி அரங்கம் அருகே மாணவர் சிலரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் பலர் காயமடைந்து விழுந்தனர். பின்னர் மிக்சிகன் பல்கலைக்கழக யூனியன் கட்டடம் அருகே சென்ற இளைஞர் மீண்டும் கண்ணில்பட்டவர்களை எல்லாம் கைத்துப்பாக்கியால் சுட்டார்.

துப்பாக்கி தாக்குதல் குறித்த புகாரை அடுத்து விரைந்து வந்த மிக்சிகன் மாகாண காவலர்கள் படுகாயமடைந்த 8 மாணவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி மூன்று மாணவர்கள் உயிரிழந்துவிட்டனர்.பலத்த காயங்களுடன் 5 மாணவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டுள்ள காவல்துறையினர். தாக்குதல் நடத்திய கறுப்பின இளைஞரை தேடிவருகின்றனர். 

Related Stories: