போர்ட்பிளேர்: வங்கதேசத்தில் இருந்து 69 ரோகிங்கியா அகதிகள் நேற்று மோட்டார்படகு மூலமாக அங்கிருந்து இந்தோனேஷியா புறப்பட்டனர். ஆனால் மோசமான வானிலை காரணமாக படகு அந்தமான் மற்றும் நிகோபரை வந்தடைந்தது. மேலும் படகில் எரிபொருளும் தீர்ந்துவிட்டதாக தெரிகின்றது. இந்த படகில் 19 ஆண்கள், 22 பெண்கள் மற்றும் 28 குழந்தைகள் இருந்தனர்.