ஸ்பெயின்: ஸ்பெயின் நாட்டின் சுகாதாரத்துறையை பாதுகாக்க வலியுறுத்தி ஸ்பெயினில் லட்சக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்தியதால் தலைநகர் மாட்ரிட் ஸ்தம்பித்தது. கொரோனா பரவிய காலத்தில் தொற்றினை மிக மோசமாக கையாண்டதாக ஸ்பெயின் அரசு மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டன. அது முதல் ஆரம்ப சுகாதார மையம் உள்ளிட்ட மருத்துவமனைகளில் சிறந்த சேவை இல்லை எனவும் ஊழியர்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படவில்லை எனவும் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.