பெய்ஜிங்: சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ள நிலையில் பலர் சுற்றுலா தளங்களுக்கு சென்று பனிப்பொழிவில் ரசித்து வருகின்றனர். சீனாவில் கொரோனா தொற்று பரவலை தடுக்க கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சீனாவில் பல்வேறு பகுதிகளில் பனிப்பொழிவு தொடங்கியுள்ளது. இந்நிலையில், பனிப்பொழிவை காண சுற்றுலா பயணிகள் பலர் அங்கு வர தொடங்கியுள்ளனர்.