‘மோடி, மோகன் பகவத்தை போல இந்தியா எங்களுக்கும் சொந்தம்’

புதுடெல்லி: நரேந்திர மோடி, மோகன் பகவத்தை போன்று முஸ்லிம்களுக்கும் சொந்தமானதுதான் இந்தியா என ஜமீயத் உலேமா இ ஹிந்த் தலைவர் மவுலானா மஹ்மூத் மதானி பேசினார். ஜமீயத் உலேமா இ ஹிந்த்(மஹ்மூத் மதானி பிரிவு) அமைப்பின் வருடாந்திர பொதுக் கூட்டம் டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடந்தது. இதில், அந்த அமைப்பின் தலைவர் மவுலானா மஹ்மூத் மதானி பேசுகையில்,‘‘ வெளிநாட்டில் இருந்து வந்தது இஸ்லாம் என்ற கருத்து தவறு. இந்த நாட்டின் மதமான இஸ்லாம் மிகவும் பழமையானது. இந்தியா எங்கள் நாடு. நரேந்திர மோடி, மோகன் பகவத்தை போன்று மஹ்மூத் மதானிக்கும் இந்த நாடு சொந்தம். இந்த விஷயத்தில் இவர்கள் இருவரை விட மஹ்மூத் மதானி ஒரு இஞ்ச் உயர்ந்தவரோ அல்லது மதானியை விட  அவர்கள் ஒரு இஞ்ச் உயர்ந்தவர்களோ கிடையாது’ என்று பேசினார். சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையில் ஈடுபடுவோர்களை தண்டிக்க தனிச்சட்டம் கொண்டு வரவேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: