பல்லாவரம்: பல்லாவரம் சந்தையில் நேற்று ஒரு வாலிபர் போதை மாத்திரைகளை விற்பனை செய்வதாக பல்லாவரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீசார் விரைந்து சென்று அந்த வாலிபரை சுற்றி வளைத்து கைது செய்தனர். விசாரணையில், அவர் சென்னை, ஆதம்பாக்கம், டாக்டர் அம்பேத்கர் நகரை சேர்ந்த வசந்த் (21) என்பது தெரிய வந்தது.