திருச்சி: துபாயில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்றிரவு இண்டிகோ விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். ஒரு ஆண் பயணியின் கைப்பையை சோதனை செய்ததில், உரிய ஆவணங்கள் இல்லாமல் 5 உயர் ரக செல்போன்கள் மற்றும் பசை வடிவிலான ஒரு மர்மபொருள் இருப்பதும் தெரியவந்தது.
