மதுரை: திருச்சி லால்குடியில் சாதிய பாகுபாடின்றி ஜல்லிக்கட்டு நடத்த கோரிய வழக்கில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. வருவாய்த்துறை அதிகாரி நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. லால்குடியில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அரசு விதிமுறைகளை பின்பற்றி அனுமதி வழங்கவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டது.