ஜகார்த்தா: இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கத்தால் மிதக்கும் கடல் உணவகம் ஒன்று மூழ்கியதில் 4 பேர் உயிரிழந்தனர். இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் உள்ள பப்புவா மாகாணத்தில் கடலோர நகரமான ஜெயபூராவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.1-ஆக பதிவான இந்த நிலநடுக்கம் தென்மேற்கே கடலுக்கு அடியில் 22 கிலோ மீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு ஏற்பட்டது. இதன் காரணமாக கடற்கரையை ஒட்டிய வீடுகள் மற்றும் கட்டடங்கள் அதிர்ந்தன. மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி திறந்த வெளிகளில் தஞ்சமடைந்தனர்.