ஆலந்தூர் பகுதி அதிமுக பொருளாளர் அ.லோகேஷ் தாயார் கஸ்தூரி மறைவு: இபிஎஸ் இரங்கல்; பா.வளர்மதி நேரில் அஞ்சலி

ஆலந்தூர்: சென்னை ஆதம்பாக்கம் பார்த்தசாரதி நகரில் வசித்துவரும் ஆலந்தூர் கிழக்கு பகுதி அதிமுக பொருளாளர் அ.லோகேஷ் தாயார் கஸ்தூரி அம்மாள்  (75) நேற்று முன்தினம் காலமானார். இதுபற்றி தகவல் அறிந்ததும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். கஸ்தூரி அம்மாள் உடலுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி வெங்கடேசன், அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, சென்னை மாநகராட்சி மன்ற எதிர்க்கட்சியை சேர்ந்த கேபிகே சதீஷ்குமார், முன்னாள் எம்பி ராமச்சந்திரன் ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

அதிமுக நிர்வாகிகள் புருஷோத்தமன், வரதராஜன், கொளப்பாக்கம் கேபி.ஏசுபாதம், தனசேகரன், பகுதி  செயலாளர் ராஜசேகர், முன்னாள் கண்டோன்மெண்ட் போர்டு துணைத் தலைவர் ஒ.ஆனந்தகுமார், கோபாலகிருஷ்ணன், நரேஷ்குமார், பிஜிஎஸ்.டில்லிபாபு, காவேரி கிருஷ்ணன், ராஜா, பாலகிருஷ்ணன், டீ கண்ணன், தங்கவேலு, கே.பி.கோபி, டார்வின், எஸ்.ரவி, சிவப்பிரகாசம், சியாமளா செல்வராஜ், சீனிவாசன், ரஜினி முருகன், ஜெகத் ராஜீவ்காந்தி, ஜீவா, ஜெ.ரமேஷ். பி.முருகன், மஞ்சுளா, பரமேஸ்வரி, சாந்தி நகர் குமார், மதுரை முத்து, ஜே.பி.முருகன், தர்மராஜ், ஜம்புலிங்கம், கோல்டன் அன்பு, ஆதம் ஏழுமலை,

கண்ணன், சத்ரிய மகா சபா மாநில செயலாளர் எம்.கே. குணா மற்றும் அதிமுக (ஒபிஎஸ்) அணி மாவட்ட செயலாளர் வி.என்.பி.வெங்கட்ராமன், செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் வைரமுத்து, மாரிசன் ரவி, பகவான், கஜேந்திரன், விமல், ஜெய பிரதாப், பிரகாஷ், குலோத்துங்கன், திமுக வர்த்தக பிரிவு கே.ஆர்.ஆனந்தன், முன்னாள் கவுன்சிலர்கள் ஜெயக்குமார், பெருமாள், வாசு, பிரேம், பாபு மற்றும் ஆலந்தூர் பகுதி  காங்கிரஸ் தலைவர் ரமேஷ், நேரு ரோஜா, ஆதம் பிரகாஷ், ஐ.செல்வம், சீதாபதி மற்றும் ஆலந்தூர், ஆதம்பாக்கம் வியாபாரி சங்க தலைவர்கள் கணேசன்,  செல்வகுமார், கதிரேசன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். இதன்பிறகு கஸ்தூரி அம்மாளின் உடல் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு ஆதம்பாக்கம் மின்சார எரி மேடையில் தகனம் செய்யப்பட்டது.

Related Stories: