புழல்: புழல் சிறையில் வரிசையில் வரச்சொன்னதால் கைதி ஒருவர், சிறை காவலருக்கு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புழல் விசாரணை சிறையில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் அந்தந்த அறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு கணக்கு எடுக்கும் பணியில் சிறை காவலர்கள் ஈடுபட்டு வருவது வழக்கம்.
இந்நிலையில், நேற்று காலையில் சிறையில் உள்ள ஒரு அறையில் ஒரு கைதியை வரிசையில் வருமாறு சிறை காவலர் வடிவேல் கேட்டுக்கொண்டார். அப்போது சிறையில் உள்ள கைதி, ‘நான் இதே பகுதியை சேர்ந்தவன், நான் வெளியில் வந்தவுடன் கொலை செய்து விடுவேன்’’ என மிரட்டி உள்ளான். இதனால் அதிர்ந்துபோன சிறை காவலர் வடிவேல், சிறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.