அண்ணாநகர்: திருமங்கலம் அண்ணாநகர் 2வது அவென்யூவில் தனியாருக்கு சொந்தமான நகை கடை உள்ளது. நேற்று முன்தினம் பர்தா அணிந்து வந்த இரண்டு பெண்கள், தங்க கம்மல் வாங்குவதற்கு கடைக்காரரிடம் வெகுநேரமாக நகை விலையை பற்றி கேட்டுள்ளனர். பிறகு ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து வருவதாகவும் கூறி விட்டு சென்றவர்கள் மறுபடியும் கடைக்கு வரவில்லை. கடையை மூடுவதற்கு முன்பு நகைகளை சரி பார்த்தபோது அதில் 16 கிராம் கொண்ட இரண்டு சவரன் கம்மல் மாயமானது தெரிய வந்தது. பின்னர் கடையில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் பர்தா அணிந்து வந்த பெண்கள் நகைகளை திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து நகை கடை மேனேஜர் அரிசங்கர் (42) திருமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்து கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசாரிடம் ஒப்படைத்தார். இதுபோல, திருவல்லிக்கேணி குப்பமுத்து தெருவில், ராஜேஷ் என்பவர் நகை கடைக்கு நேற்று முன்தினம் 2 பெண்கள் பர்தா அணிந்து கொண்டு நகைகள் வாங்க வந்தனர்.