துருக்கி : நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி, சிரியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,200ஐ தாண்டியது. கட்டிட இடிபாடுகளில் சிக்கி இருப்பவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். துருக்கியில் 8,574க்கு மேற்பட்டோரும், சிரியாவில் 2,662க்கும் அதிகமானோருக்கு உயிரிழந்தனர். துருக்கியில் நேற்று முன்தினம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.8ஆக பதிவான இந்த பூகம்பத்தால், ஹத்தே, அடியமான், அங்காரா, சிவரன் உள்ளிட்ட நகரங்களில் கட்டடங்கள் தரைமட்டமாகின. சக்திவாய்ந்த பூகம்பத்தை தொடர்ந்து 7.5 மற்றும் 6 ரிக்டர் அளவில் நிலநடுக்கங்களும், 150க்கும் மேற்பட்ட முறை நில அதிர்வுகளும் ஏற்பட்டது.