'கட்சிகளிடம் ஒற்றுமையில்லாததால் 2019ல் மீண்டும் பாஜக ஆட்சி': மாநிலங்களவையில் பாஜக அரசை உப்புமாவுடன் ஒப்பிட்டு விமர்சித்த திருச்சி சிவா..!!

டெல்லி: பாரதிய ஜனதா தலைமையிலான ஒன்றிய அரசையும், உப்புமாவையும் ஒப்பிட்டு நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. திருச்சி சிவா கூறிய உவமை கதை அவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. உப்புமா உணவை விரும்பாத கல்லூரி விடுதி மாணவர்கள், பிரிந்து இருந்ததால் மீண்டும் அவர்களுக்கு உப்புமா உணவு கிடைத்தது போல், பாஜக இரண்டாவது முறை ஆட்சியமைத்ததாக கூறிய திருச்சி சிவா, 2024ல் அது நடக்காது என தெரிவித்துள்ளார். மாநிலங்களையில் திருச்சி சிவா எம்.பி. பேசியதாவது, ஒரு கல்லூரி விடுதியில் எப்போதும் உப்புமா பரிமாறப்பட்டு வந்தது.

இதனால் எரிச்சலான மாணவர்கள், உப்புமா வேண்டாம் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். வேறு வழி தெரியாததால் வாக்கெடுப்பு நடத்த விடுதி காப்பாளர் திட்டமிட்டார். வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் 7 சதவீதம் பேர் ரொட்டியும், ஆம்லெட்டும் கேட்டு வாக்களித்தனர். 13 பேர் பூரி கேட்டிருந்தனர். 18 பேர் ஆலு பரோட்டா கேட்டிருந்தனர். 19 சதவீதம் பேர் மசாலா தோசை கேட்டு வாக்களித்தனர். 20 சதவீதம் பேர் தங்களுக்கு இட்லி கேட்டிருந்தனர். ஆனால் 23 சதவீதம் பேர் உப்புமாவுக்கே வாக்களித்தனர்.

இதனால் மீண்டும் அந்த விடுதியில் உப்புமாவே பரிமாறப்பட்டது. இந்த உப்புமாதான் 2019ல் வந்த பாஜக அரசு. எதிர்கட்சிகளிடம் ஒருமித்த கருத்து இல்லாததால் இப்படி நிகழ்ந்துவிட்டது. ஆனால் 2014க்கான பணிகளை எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவிட்டார். அனைவரும் ஓரணியில் திரள்வது பற்றி ஆலோசிக்கிறோம். மாணவர்கள் ( கட்சிகள்) அனைவரும் ஒன்று சேருவோம். கூட்டாட்சித் தத்துவம், மதசார்பின்மை, அரசியலமைப்பு சட்ட மாண்புகளை பாதுகாக்க உறுதி பூண்டுள்ளோம் என தெரிவித்தார்.

Related Stories: