சென்னை: பூந்தமல்லி பேருந்து நிறுத்தத்தில் 9.5 கிலோ கஞ்சாவுடன் இருந்த கேரள ஆசாமியை போலீசார் கைது செய்தனர். பூந்தமல்லி புறவழிச் சாலை பேருந்து நிறுத்தத்தில் டிராவல் பையுடன் ஒருவர் நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த பூந்தமல்லி மதுவிலக்கு போலீசார், சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த அவரை பிடித்து விசாரணை செய்தனர். மேலும், அவர் வைத்திருந்த பையை சோதனை செய்ததில், அதில் 9.5 கிலோ கஞ்சா இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.