டோல்கேட்டில் லஞ்சம் வாங்கிய ஊர்க்காவல் படை வீரர், போலீஸ்காரர் சஸ்பெண்ட்

வேலூர்: வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா தேசிய நெடுஞ்சாலையில் டோல்கேட் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு பள்ளிகொண்டா காவல் நிலைய 2ம் நிலை காவலர் சங்கர், ஊர்க்காவல் படை வீரர் நவீன் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வரும் வாகன ஓட்டிகளிடம் இருவரும் லஞ்சம் வாங்கும் வீடியோ வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலானது. இதுகுறித்து எஸ்பி மணிவண்ணன் நடத்திய விசாரணையில் இருவரும் லஞ்சம் வாங்கியது உறுதியானது. இதையடுத்து 2ம் நிலை காவலர் சங்கர், ஊர்க்காவல் படை வீரர் நவீன் ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் செய்து எஸ்பி மணிவண்ணன் நேற்று அதிரடியாக உத்தரவிட்டார்.

The post டோல்கேட்டில் லஞ்சம் வாங்கிய ஊர்க்காவல் படை வீரர், போலீஸ்காரர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Related Stories: