தண்டையார்பேட்டை: வெளிமாநிலத்தில் இருந்து விரைவு ரயில் மூலம் கஞ்சா கடத்திய வாலிபரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து ரயில் மூலம் கஞ்சா கடத்தி வருவதாக ரயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி டிஎஸ்பி முத்துக்குமார் மற்றும் ஆய்வாளர் சசிகலா ஆகியோர் தலைமையில், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போலீசார் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். அப்போது, 10வது நடைமேடையில் தன்பாத் விரைவு ரயிலில் வந்த பயணிகளை கண்காணித்தனர். சந்தேகப்படும்படி வந்தவரை மடக்கி அவரது பையை சோதனை செய்தனர்.