திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் தை மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நேற்று இரவு 10.41 மணிக்கு தொடங்கி, இன்று நள்ளிரவு 12.48 மணிக்கு நிறைவடைகிறது. அதையொட்டி, அண்ணாமலையார் கோயிலில் சுவாமிக்கும், அம்மனுக்கும் பவுர்ணமி சிறப்பு வழிபாடுகள் நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று மாலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.