மதுரை நகர பாஜ முன்னாள் தலைவர் டாக்டர் சரவணன், எடப்பாடி முன்னிலையில் சமீபத்தில் அதிமுகவில் இணைந்தார். அவரது ஏற்பாட்டில் மதுரை விமான நிலையம் அருகே, எடப்பாடி முன்னிலையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கட்சியில் இணையும் நிகழ்ச்சி இன்று நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் ஓபிஎஸ், இபிஎஸ் இணைந்து அதிமுக பொதுக்குழுவை கூட்டி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளரை முடிவு செய்ய உச்சநீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது.