விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்குவதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

சென்னை: விஷச்சாராயம் அருந்தி உயிரை மாய்த்து கொள்பவர்களுக்கு இழப்பீடாக 10 லட்ச ரூபாயை அரசு வழங்க கூடாது என்று உத்தரவிடக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி 65 க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவித்தது. இதை எதிர்த்து சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த குமரேஷ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதில், கள்ளச்சாரயம் அருந்துவது என்பது சட்ட விரோதமான செயல். சாகித்ய அகடமி விருது பெறும் எழுத்தாளர்களுக்கு ரூ. 1 லட்சம் மட்டுமே ஊக்க தொகை வழங்கப்படுகிறது. அரசு ஊழியர்கள் பணியின் போது உயிரிழக்க நேரிட்டால் ரூ. 2 லட்சம் மட்டுமே வழங்கப்படுகிறது. இந்நிலையில் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களுக்கு மட்டும் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்குவது சட்ட விரோத செயலை ஊக்கப்படுவது போல் ஆகி விடும் என்று குறிப்பிட்டுள்ளார்.இந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், என்.செந்தில்குமார் அமர்வு, இந்த வழக்கு விளம்பர நோக்கதுடன் தொடரப்பட்டிருக்கிறது. இழப்பீடு வழங்குவது என்பது அரசின் கொள்கை முடிவு. அதில் நீதிமன்றம் தலையிடாது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

The post விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்குவதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி appeared first on Dinakaran.

Related Stories: