ஜோகன்னஸ்பர்க்: தென் ஆப்ரிக்காவில் நடைபெற உள்ள ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை தொடரில் விளையாடும் 10 அணிகளும் பங்கேற்கும் பயிற்சி ஆட்டங்கள் நாளை தொடங்குகின்றன. தென் ஆப்ரிக்காவில் 8வது மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் பிப்.10ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, இலங்கை, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, வங்கதேசம், அயர்லாந்து, வெஸ்ட் இன்டீஸ் என மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. இவை தலா 5 அணிகள் கொண்ட 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. லீக் ஆட்டங்களின் முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதி ஆட்டங்களில் விளையாடும்.