மதுரை: மதுரை அரசு மருத்துவமனை மகப்பேறு பிரிவு அருகே கழிவுநீர் தொட்டியில் பெண் சிசு மீட்கப்பட்டது. கழிவுநீர் தொட்டியில் இருந்து சிசுவை மீட்டு பரிசோதித்ததில் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். பெண் சிசுவை வீசி சென்றவர் யார்? என்பது குறித்து மருத்துவனை வளாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.