நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீ விபத்து..!!

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூடுதல் கட்டிடத்தில் செயல்படும் மாவட்ட தோட்டக்கலை தொழில்நுட்ப ஆதார் மைய அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. முக்கிய ஆவணங்கள், கணினிகள் எரிந்து சேதம்; 3 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. விபத்து குறித்து நல்லிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: