புதுடெல்லி: அதானி குழும பங்குகளின் மதிப்பு கடந்த 10 நாளில் ரூ.10.28 லட்சம் குறைந்துள்ளது. அமெரிக்காவின் முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் நடத்திய ஆய்வில் இந்திய தொழிலதிபர் கவும் அதானியின், அதானி குழுமம் பங்கு சந்தையல் வரலாறு காணாத வகையில் ரூ.17.80 லட்சம் கோடி மோசடி செய்ததாக ஆதாரங்களுடன் அறிக்கை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து, அதானி குழுமத்தின் பங்குகள் கடும் வீழ்ச்சி அடைந்து வருகிறது. மும்பை பங்கு சந்தை மற்றும் தேசிய பங்கு சந்தை, அதானி எண்டர்பிரைசஸ், அதானி துறைமுகம் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலம், அம்புஜா சிமெண்ட் ஆகியவற்றை பங்கு சந்தையின் குறுகிய கால கூடுதல் கண்காணிப்பு நடவடிக்கையின் கீழ் கொண்டு வந்தது. இந்நிலையில், பங்குகளை கையாளுதல் மற்றும் வங்கி கணக்கு மோசடி குற்றச்சாட்டுகள் குறித்து ஊடகங்கள் மற்றும் பங்குதாரர்களின் ஆய்வு முடிவுகளைத் தொடர்ந்து, அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தை அமெரிக்க பங்கு சந்தையில் டவ் ஜோன்ஸ் நிலைத்தன்மை குறியீட்டிலிருந்து வரும் 7ம் தேதி முதல் நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக டவ் ஜோன்ஸ் தெரிவித்துள்ளது.