தமிழக நலனுக்காக இணைந்து செயல்படுமாறு, பழனிசாமி பன்னீர்செல்வத்திடம் வலியுறுத்தினோம் என சி.டி ரவி தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வத்தை சந்தித்தது ஏன்? என்பது குறித்து தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி ஆகியோர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது பேசிய சி.டி.ரவி, தமிழ்நாட்டில் இடைத்தேர்தலில் பணபலம் விளையாடும் என்பதை அறிவோம். இடைத்தேர்தலில் ஒன்றுபட்ட அதிமுக அவசியம். பாஜக நிலைப்பாடு குறித்து அகில இந்திய தலைவர் ஜே.பி.நட்டாவின் கருத்தை பழனிசாமி, பன்னீர் ஆகியோரிடம் எடுத்து கூறினோம்.