திருவள்ளூர்: தமிழ் நாட்டிலேயே முதல் முறையாக திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள உணவகத்தில் பீப்ப் பிரியாணி உணவை சேர்க்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டுவரும் மூன்று உணவகங்களை மகளிர் சுயஉதவிக்குழுவினர் நடத்திவருகின்றனர். இந்த உணவகங்களில் மாட்டிறைச்சி உணவை சேர்க்க கோரி செவ்வாய் பேட்டையை சேர்ந்த ஊழியரும் சமூக ஆர்வலருமான மோகன் என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். இந்த கோரிக்கையை ஏற்க மாவட்ட ஆட்சியர் மறுத்ததை அடுத்து தேசிய தாழ்த்தப்பட்ட ஆணையத்தில் மோகன் முறையிட்டார்.