வேலூர்: இலங்கையை ஆண்ட கடைசி தமிழ் மன்னர் விக்ரம ராஜசிங்கருக்கு வேலூரில் சிலை அமைக்க வேண்டும் என்று அவரது பிறந்தநாளை அரசு விழாவாக நடத்த வேண்டும் என்றும் மன்னரின் வாரிசுகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். வேலூர் பாலாற்றுக்கரையில் இலங்கையை ஆண்ட கடைசி தமிழ் மன்னர் விக்ரம ராஜசிங்கரின் நினைவு மண்டபம் முத்து மண்டபமாக கட்டப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. விக்ரம ராஜசிங்கரின் 191-வது நினைவு தினத்தை முன்னிட்டு மன்னரின் குடும்பத்தினரும், பொதுமக்களும், மன்னரின் குடும்ப வாரிசுகளின் ஒருவரான அசோக் ராஜா தலைமையில் ராஜாவின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.