சேலம்: சேலம் அருகே கோயிலில் சாமி கும்பிட்ட வாலிபரை ஜாதி பெயரை சொல்லி திட்டிய ஊராட்சி தலைவர் வன்கொடுமை சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார். சேலம் அருகே திருமலைகிரியில் இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பெரிய மாரியம்மன் கோயில் உள்ளது. கடந்த 26ம்தேதி இரவு 8.30 மணியளவில் திருமலைகிரி ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த வாலிபர் பிரவீன்குமார்(26) கோயிலுக்குள் சென்று சாமி கும்பிட்டுள்ளார். திருமலைகிரி ஊராட்சி தலைவர் மாணிக்கம், பிரவீன்குமாரை அழைத்து ஜாதி பெயரை சொல்லி ஆபாசமாக திட்டியுள்ளார். இனிமேல் கோயிலுக்குள் வரக்கூடாது என எச்சரிக்கை செய்து அனுப்பியுள்ளார்.