தெஹ்ரான்: ஈரானில் நேற்றிரவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 7 பேர் பலியானதாகவும், 440க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. துருக்கி - ஈரான் எல்லைக்கு உட்பட்ட ஈரான் நாட்டின் வடமேற்கு நகரமான கோய் நகரில் நேற்றிரவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன. சில இடங்களில் வீடுகள் சரிந்து விழுந்தன. பீதியடைந்த மக்கள், வீட்டிலிருந்து வெளியே வந்து வீதியில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் 7 பேர் பலியாகினர். சுமார் 440 பேர் காயமடைந்தனர்.