சென்னை: மணலி மண்டலம், 21வது வார்டுக்குட்பட்ட அம்பேத்கர் தெருவில் மாநகராட்சியின் இ-சேவை மையம் உள்ளது. இங்கு, மின்சார கட்டணம் செலுத்துதல், வீட்டு வரி, தொழில் வரி செலுத்துதல் மற்றும் வருவாய்த்துறை, மாநகராட்சி தொடர்பான விண்ணப்பங்கள் போன்றவைகளுக்கு ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் குடியரசு தினம் என்பதால் விடுமுறை அளிக்கப்பட்டு, நேற்று வழக்கம்போல் பெண் ஊழியர்கள் இ-சேவை மையத்திற்கு வந்தனர்.