கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகராட்சி டெண்டரில் குளறுபடி மற்றும் உரிமை தொகை செலுத்தாமல் நகராட்சிக்கு இழப்பை ஏற்படுத்தியதால், நகராட்சி அதிகாரிகள் 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடைகள், கட்டண கழிப்பிடம், நகராட்சி கட்டிடங்கள் குத்தகை உள்ளிட்டவற்றுக்கு டெண்டர் விடப்படுவது வழக்கம். இதில் குத்தகை இனத்தொகை குறைவாக பதிவு செய்தும், உரிமை தொகைகள் சரிவர செலுத்தாமல் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக உயர் அதிகாரிகளுக்கு புகார் சென்றது.
இது தொடர்பாக, ஏற்கனவே நகராட்சி இளநிலை உதவியாளர் சரஸ்வதி, சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில், கிருஷ்ணகிரி தினசரி மார்க்கெட் சுங்க வசூல், புதிய, பழைய பஸ் நிலைய கட்டண கழிப்பிடம், புதிய பஸ் நிலையத்தில் தட்டுமுறுக்கு விற்பனை, கிழங்கு மற்றும் பூவிற்கும் உரிமம் உள்ளிட்டதற்கான டெண்டர்கள் விடப்பட்டதில், குத்தகை தொகை மிகவும் குறைவான அளவில் கோரப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இதில் உரிமை தொகையும் செலுத்தப்படவில்லை. அதிகாரிகள் இதனால் நகராட்சி நிர்வாகத்திற்கு ரூ.60 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.