மேலூர்: மேலூர் அருகே திருமணம் முடிந்தவுடன் மணமகளை, தனது வீட்டிற்கு மாட்டு வண்டியில் அழைத்து சென்ற இன்ஜினியர் மணமகனை ஆச்சரியத்துடன் பொதுமக்கள் பார்த்தனர். மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழையூரை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி சித்ராதேவி. இவர்களது மகன் கதிர் என்ற கணேஷ். இன்ஜினரியரிங், டிசிஇ படித்த இவர் கன்ஸ்ட்ரக்சன்ஸ் மற்றும் இயற்கை ஆர்கானிக் பார்ம் வைத்துள்ளார். இயற்கையாக வாழ வேண்டும், காற்று மாசுபாடு இல்லா வாழ்க்கை வாழ வேண்டும் என்பது இவரது லட்சியம். நேற்று இவருக்கும், மேலநாட்டார்மங்கலத்தை சேர்ந்த பட்டதாரி மணமகள் சிவரஞ்சனிக்கும், கீழையூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.