சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் அருகே காதல் திருணம் செய்த புதுப்பெண்ணை மர்ம நபர்கள் காரில் கடத்தி சென்றது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்த அக்கியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகன் பிரவீன்குமார். பி.இ பட்டதாரி. இவர் எருமப்பட்டி அடுத்த கூலிப்பட்டியை சேர்ந்த மோகன்ராஜ் மகள் கவுசல்யா என்பவரை கடந்த ஒரு வருடமாக காதலித்தார். இருவரும் கடந்த 23ம் தேதி திருமணம் செய்துகொண்டு திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர். இதனைதொடர்ந்து பெற்றோரை காவல்நிலையம் அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கவுசல்யா, தனது கணவருடன் செல்வதாக கூறினார். இதனால் அவரை பிரவீன்குமாருடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.