நேரடி பணி நியமணத்தின்போது ஊழல் இல்லாத அளவுக்கு வெளிப்படைத்தன்மையை பின்பற்ற வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: நேரடி பணி நியமணத்தின்போது  ஊழல் இல்லாத அளவுக்கு வெளிப்படைத்தன்மையை பின்பற்ற வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கோவை மாநகராட்சியில் முந்தைய ஆட்சியில் ஒரே நாளில் 54 இளநிலை உதவியாளர்கள் நியமிக்கப்பட்டதை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் கோவை மாநகராட்சியில் ஒரே நாளில் 54 இளநிலை உதவியாளர்கள் நியமனமானதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி செய்துள்ளனர். தூய்மை பணியாளராக நியமனமான மனுதாரர், இளநிலை பொறியாளர் தேர்வு நடைமுறையில் பங்கேற்காத நிலையில் வழக்கு தொடர முடியாது என்று நீதிபதி கூறியுள்ளனர்

விளம்பரங்கள் செய்யப்பட்டததால் தகுதி இருந்தும் தேர்வு நடைமுறைகளில் கலந்து கொள்ள முடியவில்லை என ஈஸ்வரி வழக்கு தொடர்ந்துள்ளார். அப்போதைய உள்ளாட்சி துறை அமைச்சர்களின் செல்வாக்கால் மேற்கொள்ளப்பட்ட நியமனங்களை ரத்து செய்ய கோரி வழக்கு தொடரப்பட்டது. யாருக்கும் சலுகை இல்லை, தேர்வு நடைமுறை இடஒதுக்கீட்டு நடைமுறையே பின்பற்றியே நியமனங்கள் நடந்தன என்று கோவை மாநகராட்சி கூறியுள்ளது.  

கோவை மாநராட்சியில் 69 இளநிலை உதவியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இப்பணிக்கு 654 பேர் விண்ணப்பித்த நிலையில், 440 பேர் நேர்முகத்தேர்வுக்கும், சான்றிதழ் சரிபார்ப்புக்கும் அழைக்கப்பட்டு, 54 பேர் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டனர். இந்த நியமனங்களை ரத்து செய்யக் கோரியும், தனக்கு முன்னுரிமை வழங்கக் கோரியும் கருணை அடிப்படையில் 2016-ஆம் ஆண்டு தூய்மைப் பணியாளராக நியமிக்கப்பட்ட ஈஸ்வரி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த மனுவில், உரிய தகுதி இருந்தும், முறையாக விளம்பரங்கள் செய்யப்படாததால், தன்னால் இளநிலை உதவியாளர் பணிக்கான தேர்வு நடைமுறைகளில் கலந்து கொள்ள முடியவில்லை என்றும், உரிய விதிகளையும், இடஒதுக்கீட்டு நடைமுறையையும் பின்பற்றாமல் 54 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அப்போதைய உள்ளாட்சித் துறை அமைச்சரின் செல்வாக்கு காரணமாக, இவர்கள் அனைவரும் ஒரே நாளில் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

Related Stories: