புனே: புனே அருகில் அமைந்துள்ள பீமா நதிக்கரையில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரை கொலை செய்ததாக உறவினர்கள் 5 பேரை போலீசார் கைது செய்தனர். மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இருந்து 45 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள யாவாத் கிராமத்தின் அருகில் பாயும் பீமா நதிக்கரையில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேரின் உடல்கள் கடந்த சில நாட்களுக்கு முன் மீட்கப்பட்டன. முதற்கட்ட விசாரணையில், இவர்கள் 7 பேரும் ஒஸ்மானபாத் மாவட்டத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான மோகன் பவார் (45), அவரின் மனைவி சங்கீதா மோகன் (40), மகள் ராணி புல்வாரே (24), மருமகன் ஷியாம் ஃபுல்வாரே (28), மூன்றிலிருந்து 7 வயது வரையிலான 3 பேரக் குழந்தைகள் என்பது தெரிய வந்தது.
இவர்களின் 7 உடல்களும் 200 முதல் 300 மீட்டர் வரையிலான தொலைவில் கண்டறியப்பட்டதாக போலீசார் கூறினர். மேலும், அவர்களில் 4 பேரின் பிரேத பரிசோதனை முடிவில் தண்ணீரில் மூழ்கியதே உயிரிழப்புக்கான காரணம் எனக் கண்டறியப்பட்டது. இதையடுத்து, 7 பேரும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை ெதாடங்கினர். தொடர் விசாரனையில், இறந்தவர்களின் உறவினர்கள் 5 பேரே திட்டமிட்டு 7 பேரை கொன்றது அம்பலமானது. அதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.