மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா அளித்துள்ள பேட்டி: சூர்யகுமார் யாதவ் ஒயிட்பால் கிரிக்கெட்டில் சிறப்பாக ஆடி வருகிறார். கண்டிப்பாக அவர் மூன்று வடிவங்களிலும் விளையாட வேண்டும் என்று நான் நினைக்கிறேன், அவர் இல்லாமல், மூன்று வடிவங்களும் கூட இருக்கக்கூடாது. அவர் பயமின்றி விளையாடுகிறார்.
மைதானத்தின் பரிமாணத்தை எப்படி பயன்படுத்துவது என்று அவருக்குத் தெரியும். அவருக்கு சிவப்பு-பந்து(டெஸ்ட்) கிரிக்கெட் விளையாடுவது எப்படி என்று தெரியும். டெஸ்ட்டில் அவர் பல 100 மற்றும் 200 ரன்களை அடிப்பார், என்றார்.