ஆபாச படங்களை வெளியிட்ட ராக்கி சாவந்த் மீது நடவடிக்கை வேண்டாம்: போலீசாருக்கு ஐகோர்ட் உத்தரவு

மும்பை: ஆபாச படங்களை வெளியிட்ட நடிகை ராக்கி சாவந்த் மீது வரும் பிப். 1ம் தேதி வரை நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த், பொது இடங்களில் ஆபாசமான செய்கைகளின் மூலம் தன்னை பிரபலப்படுத்திக் கொள்வார். இவர் மீது மற்றொரு நடிகையும், மாடல் அழகியுமான ஷெர்லின் சோப்ரா என்பவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மும்பை அம்போலி போலீசில் புகார் அளித்து இருந்தார். அந்த புகாரில், தனது ஆபாச படங்களை நடிகை ராக்கி சாவந்த் சமூகவலைதளங்களில் பரப்பியதாக கூறியிருந்தார்.

இந்த புகார் தொடர்பாக பாலியல் துன்புறுத்தல், அவதூறு பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ராக்கி சாவந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கைது நடவடிக்கையை தவிர்ப்பதற்காக முன்ஜாமீன் கேட்டு ராக்கி சாவந்த் தரப்பில் செசன்ஸ் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் மும்பை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். இந்த மனு விசாரித்த நீதிமன்றம், ராக்கி சாவந்த் மீது வருகிற பிப்ரவரி 1ம் தேதி வரை எந்த நடவடிக்கையும் போலீசார் எடுக்க வேண்டாம் என்று உத்தரவிட்டது.

Related Stories: