இதனால் முக்கிய சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கனமழையால் வீடு இடிந்து விழுந்ததில் ராஜஸ்தானில் இருவர் உயிரிழந்துள்ளனர். பீகார் மாநிலத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இடி, மின்னல் தாக்கியத்தில் 6 மாவட்டங்களில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் பெய்த மழையால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. முக்கிய சாலைகள் சேதமடைந்துள்ளன. கனமழை எச்சரிக்கையை அடுத்து கேரளாவில் பத்தனம்திட்டா, கோட்டயம், ஆலப்புழா, இடுக்கி, எர்ணாகுளம், வயநாடு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
The post குஜராத், ராஜஸ்தான், டெல்லியில் பரவலாக கனமழை: இடி மின்னல் தாக்கியதில் பீகாரில் 8 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.