தண்டையார்பேட்டை: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் மாலை ஒன்பதாவது நடைமேடையில் பூரி எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது. அப்போது ஆய்வாளர் சசிகலா தலைமையில் போலீசார் சந்தேகத்தின் பேரில் ஒரு வாலிபர் வைத்திருந்த பையை சோதனையிட்டனர். அதில், கஞ்சா பொட்டலம் இருப்பது தெரிய வந்தது.