டெல்லி: தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. டெல்லியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் நேபாளத்தை மையமாக கொண்டு ரிக்டர் அளவில் 5.9ஆக பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. டெல்லி என்.சி.ஆர். உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டது. சரியாக மதியம் 2.28 மணிக்கு நிலநடுக்கம் ஏற்படுட்டுள்ளதாக கூறப்படுகிறது. நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. வீட்டில் இருந்த பொருட்கள் கீழே விழுந்து உருண்டு ஓடின.