தலைநகர் டெல்லியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: இருமுறை உணரப்பட்டதால் பொதுமக்கள் அச்சம்..!

டெல்லி: தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. டெல்லியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் நேபாளத்தை மையமாக கொண்டு ரிக்டர் அளவில் 5.9ஆக பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. டெல்லி என்.சி.ஆர். உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டது. சரியாக மதியம் 2.28 மணிக்கு நிலநடுக்கம் ஏற்படுட்டுள்ளதாக கூறப்படுகிறது. நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. வீட்டில் இருந்த பொருட்கள் கீழே விழுந்து உருண்டு ஓடின.

இதனால் தூக்கத்தில் இருந்த பொதுமக்கள் அச்சத்தில் அலறியடித்தபடி வீடுகளில் இருந்து பாதுகாப்பிற்காக தெருக்களில் குவிந்தனர். பல இடங்களில் வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. ஒரு சில இடங்களில் கட்டிடங்கள் இடிந்து சேதமடைந்தது. அப்போது வீடுகள் அதிர்ந்தது, பொருட்கள் உருண்டு ஓடியது, கதவுகள், ஜன்னல்கள் ஆடியது தொடர்பான வீடியோக்களை பொதுமக்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதவிவரங்களும் உடனடியாக தெரியவில்லை.

Related Stories: