தெலுங்கானா: தெலுங்கானா மாநில தலைமை செயலக திறப்பு விழாவில் பங்கேற்க வருமாறு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். புதிதாக கட்டப்பட்டுள்ள தெலுங்கானா மாநில தலைமை செயலகம் பிப்.17-ல் திறக்கப்பட உள்ளது. ஐதராபாத்தில் மும்பை சாலையில் உள்ள எரகடா அரசு நெஞ்சக மருத்துவமனை வளாகத்தில் இந்த புதிய அரசு தலைமை செயலகம் கட்டப்படவுள்ளது. இதற்காக ரூ. 150 கோடி நிதியை ஒதுக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. எரகடாவில் உள்ள அரசு நெஞ்சக மருத்துவமனையை விகாராபாத்திற்கு மாற்றவிருப்பதாக கடந்த வாரம் முதல்வர் அறிவித்திருந்தார்.