பெண் உயிரிழப்பால் ஆவேசம் களக்காடு அருகே கடித்த பாம்பை அடித்துக்கொன்றபொதுமக்கள் -வலைதளங்களில் வீடியோ வைரல்

களக்காடு : களக்காடு அருகே பாம்பு கடித்து பெண் உயிரிழந்ததார். இதனால் ஆவேசமடைந்த மக்கள் கடித்த பாம்பை தேடி கண்டுபிடித்து அடித்துக் கொன்று தொங்கவிட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. களக்காடு அருகே பெருமாள்குளம் கீழத்தெருவை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் தோமஸ் (57). இவரது மனைவி மேரி பாக்கியமணி (53). இவர்கள் மாடுகள் வளர்த்து வருகின்றனர். இதற்காக வீட்டு அருகே உள்ள தோட்டத்தில் வைக்கோல் படப்பு வைத்துள்ளனர்.

இந்த தோட்டத்தில் நீண்ட நாட்களாக 15 அடி நீளம் கொண்ட  பாம்பு சுற்றி வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 20ம் தேதி மேரி பாக்கியமணி மாடுகளுக்கு வைக்கோல் போடுவதற்காக, வைக்கோல் படப்புக்கு சென்றார். அப்போது அவரை பாம்பு கடித்தது. இதனைதொடர்ந்து அவரை சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மேரி பாக்கியமணி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து களக்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து தெரியவந்ததும் ஆவேசமடைந்த ஊர் மக்கள் தோட்டத்திற்கு சென்று அவரை கடித்த பாம்பை தேடினர். அப்போது பாம்பு பொந்துக்குள் பதுங்கியிருந்ததை கண்டனர். உடனடியாக அந்த பாம்பை அடித்தே கொன்று தொங்கவிட்டனர். பாம்பை உறவினர் அடித்து கொன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை

ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: