ஏதென்ஸ்: போலந்தில் இருந்து கிரீஸ் நோக்கிச் சென்ற ‘ரயன்ஏர்’ என்ற விமானத்தில் 190 பேர் பயணித்தனர். அந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக தகவல் கிடைத்ததால், இந்த விமானம் ஏதென்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதுகுறித்து கிரேக்க காவல்துறை செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டான்டியா டிமோக்லிடோ கூறுகையில், ‘ஸ்லோவாக்கியா கடல் வழியாக விமானம் சென்று கொண்டிருந்த போது, கட்டுப்பாட்டு மையத்திற்கு தொலைபேசியில் வெடிகுண்டு எச்சரிக்கை வந்தது.