அம்னாட்: தாய்லாந்து நாட்டின் வடகிழக்கு மாகாணமான அம்னாட் சாரோனில் இருந்து பாங்காக் நோக்கி 12 பயணிகளை ஏற்றிக் கொண்டு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. இவர்கள் சந்திர புத்தாண்டு கொண்டாடுவதற்காக சென்று கொண்டிருந்தனர். அந்த வேன் திடீரென சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதனால் ஏற்பட்ட தீ விபத்தால், வேன் முழுவதுமாக தீப்பற்றி எரிந்தது. வாகனத்தில் இருந்த இரண்டு குழந்தைகள் உட்பட 11 பயணிகள் தீயில் கருகி பலியாகினர். ஒருவர் மட்டும் வேனின் ஜன்னல் வழியாக குதித்து தீக்காயங்களுடன் உயிர் பிழைத்தார்.