வாணியம்பாடி: தடைமீறி ஊர்வலம் சென்ற காங்கிரசார் 5 பேர் கைது செய்யப்பட்டனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பஸ் நிலையம் அருகே முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி உருவ சிலையின் அருகே மலர் மாலை அணிவிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த ஏணியை யாரோ சிலர் அகற்றியுள்ளனர். இதனை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் அன்றைய தினம் வாணியம்பாடி பஸ் நிலையம் அருகே மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மாநில சிறுபான்மை துறை தலைவர் அஸ்லாம்பாஷா, வாணியம்பாடி முன்னாள் நகர தலைவர் கமால்பாஷா ஆகியோர் தலைமையில் நேற்று வாணியம்பாடி டிஎஸ்பி சுரேஷ்பாண்டியன் மற்றும் டவுன் போலீசில் புகார் அளித்தனர்.